Thursday, December 14, 2023

திருப்பாவை 29 பாடல் + விளக்கம்

 மார்கழி - 29 பாடல் + விளக்கம்

உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக!
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மெய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
விளக்கம்;
"விடியற்காலையில் உன்னை வழிபட்டு, உன் தாமரை மலரைப் போன்ற மென்மையான திருவடிகளைப் போற்றி நாங்கள் விரும்பியவைகளைக் கொடுத்து அருள் செய்யவேண்டும். பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் எங்களைப் போன்றே அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது. உன்னிடமிருந்து, பறை வாத்தியம் போன்ற பொருள்களைப் பெற்றுக் கொண்டவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை. காலம் உள்ளவரை, மேலும் மேலும் மீண்டும் பிறவியெடுப்பினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு, மற்ற பொருள்களின் மீது ஏற்படும் ஆசையை தவிர்தருள வேண்டும்."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

திருப்பாவை பாடல் விளக்கம் #திருப்பாவை கற்போம்

Rules to follow while reading #thiruppavai pasurams. #andal pic.twitter.com/D8TP6cpIDq — Selvaraj Venkatesan (@niftytelevision) May 3, 2023